
என் ஓ சி எனப்படும் தேசிய செயல்பாட்டு மன்றத்தை அமைக்க தேவையில்லை என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் இன்று தெரிவித்தனர்.
நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்தித்த துன் டாக்டர் மகாதீர் முகமது என் ஓ சி நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்தார்
.கடந்த 1969 ஆம் ஆண்டு என்ஓசி அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போது அதே போன்ற ஒரு நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என துன் மகாதீர் கூறியிருக்கிறார்.
கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இநத என்ஒசி தேவையில்லை என்று கூட்டாக தெரிவித்தனர்.
அதற்கு பதிலாக ஊரடங்கு முடிவுக்கு கொண்டு வந்து நாடாளுமன்றத் கூட்டும் படி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
