
கோலாலம்பூர் மார்ச் 11-
சமயத்தை இழிவு படுத்துவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.
யாராக இருந்தாலும் அவர்கள் எந்த ஒரு மதத்தையும் இழுவு படுத்தக் கூடாது.
மலேசிய திருநாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் அனைவரும் சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டும்.
யாரும் எந்த மதத்தையும் இழிவு படுத்தக் கூடாது.
மதத்தை இழிவுபடுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும் என்று அவர் சொன்னார்.
கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் காரா சாரா உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
