
அருண் துரைசாமிக்கு எதிராக போலிசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் இதனை கூறினார்.
சமீபத்தில் தனது சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி மூலம் இனவாத அறிக்கைகளை வெளியிட்டதாக அருண் துரைசாமி மீது விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
பினாங்கு பத்து கவானில் இது தொடர்பான புகாரை போலிசார் பெற்றனர்.
அருணின் அறிக்கையைக் காட்டும் ஒரு காணொளி வாட்ஸ்அப் செயலியில் 3ஆர் எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான தூண்டுதல்களைக் கொண்டுள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் போலிஸ்படையையும் பிரதமரையும் தொட்டதாக அவர் கூறினார்.
ஜம்ரி வினோத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் தானும் மலேசிய இந்து மத சங்கமும், இந்து சமூகத்தினரும் வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
