
டத்தோ டி.மோகன் அவர்களின் பிறந்தநாள் விழா பூச்சொங்கில் உள்ள அவரது இல்லத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் டத்தோ கணேசன், டத்தோ சிவகுமார், டத்தோ புத்திரி சிவம் என அதிகமான தொழிலதிபர்களும், நண்பர்களும், உறவினர்களும் அதிகமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இங்கு டத்தோ டி.மோகன் பேசும் போது, எனது நண்பர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அரசியலில் நீண்ட காலமாக இருந்து வந்தேன். இப்பொழுதும் இருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை எல்லோரும் என்னிடம் இந்த அன்பு வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார். தமிழகத்தில் இருந்து நடிகர் கருணாஸ் இவ்விழாவில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

