
15 பாலஸ்தீனச் சுதந்திரப் போராளிகளை மலேசியாவில் தங்க அனுமதிப்பது காசாவில் அமைதியை ஆதரிப்பதற்கான நாட்டின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்சில் இன்று தெரிவித்தார்.
இஸ்ரேலியச் சிறைகளில் 20 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
காசாவில் அமைதி முயற்சிகள் மற்றும் போர்நிறுத்தத்தை ஆதரிப்பதற்கான உலக இஸ்லாமிய அமைப்பின் முடிவைத் தொடர்ந்து இது குறித்து வெளியுறவு அமைச்சர் அமைச்சரவைக்குத் தெரிவித்துள்ளார் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 380 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பாலஸ்தீனத்தில் தங்க அனுமதிக்கப்படவில்லை.
இதன் விளைவாக, கத்தார் மற்றும் துருக்கி போன்ற பல நாடுகள் இந்தப் பாலஸ்தீனர்களில் 100 பேரை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
அதே நேரத்தில் மலேசியா 15 பேரை ஏற்றுக் கொண்டுள்ளது என்று அவர் தனது வாராந்திர அமைச்சரவைக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
இந்த 15 பேர் இன்னும் மலேசியா வந்தடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
