
மலாக்காவில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 36 கும்பலைச் சேர்ந்த ஐந்து ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மிட்டி எனப்படும் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சிடம் இருந்து பெற்ற அனுமதி கடிதத்தை கொண்டு இந்த கும்பல் மலாக்கா மாநிலம் கடந்து ஒரு தொழிலதிபர் வீட்டில் 12 லட்சம் வெள்ளியை கொள்ளை அடித்துள்ளது.
இந்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
