
சுபாங்ஜெயா புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்துக்கு இதுவரை உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ஜூல்கிப்ளி அஹ்மத் உறுதி செய்தார்.
🩺 104 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் – இதில் குழந்தைகள் உட்பட அனைவரும் சீரான உடல்நிலையில் உள்ளனர்.
✅ தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) யாரும் அனுமதிக்கப்படவில்லை.
✅ வழக்கமான வார்டுகளில் வைத்தியசாலைகள் கண்காணிக்கின்றன.
✅ யாருக்கும் சுவாச உதவி தேவைப்படவில்லை.
🔥 இருப்பினும், சிலர் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
📍 நான்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஐந்து தனியார் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
🚑 செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
📢 சம்பவம் தொடர்பாக மேலும் தகவலுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்! 🔥
