
கோலாலம்பூர் ஏப்ரல் 15-
கோபியோ எனப்படும் அனைத்துலக இந்திய வம்சாவளி வர்த்தக மாநாடு மற்றும் விருதளிப்பு விழா இம்முறை இந்திய புதுச்சேரியில் நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த அனைத்துலக மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கோபியோ அனைத்துலக வர்த்தக மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இம்முறை புதுச்சேரியில் நடக்கும் மாநாடு முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவுக்கான இந்திய தூதர் பி. என். ரெட்டி இன்று இந்த மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வமாக சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
மலேசிய கோபியோ தலைவர் குணசேகரன், பீக்கிம் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் கலந்து சிறப்பித்தனர்.
