28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கூகுளுடன் இணைந்து AI கல்வி திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம்!

நாடளாவிய புகழைப் பெற்ற ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிட்டு புதிய பரிமாணம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளது. மலேசியாவில் உள்ள கூகுள் நிறுவனத்துடன் கூட்டணியில், இந்நிலைமையில் அத்தியாய புதிய “AI கல்வி திட்டம்” அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற விழாவில், கூகுள் நிறுவன அதிகாரியான ஃபைரூஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, AI கல்வி திட்டத்தை திறந்து வைத்தார். மாணவர்களின் மேம்பாட்டிற்காகவே இந்த பிரத்தியேக முயற்சி எடுத்துள்ளதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுரேன் கூறும்போது, “மாணவர்களுக்கு பல புதிய திகட்டான திட்டங்களை எப்போதும் அறிமுகம் செய்து வருகின்றோம். அந்த வகையில் உலகத் தரத்தில் நிறைந்த கூகுள் நிறுவனத்துடன் இணைவது மிகப் பெரிய சாதனை. இதன் மூலம் எமது மாணவர்கள் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை முன்னோக்கி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள்,” என பெருமையுடன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles