
நேற்று நடைப்பெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில், நாடு முழுமையும் பூக்கடை வியாபாரிகள் செயல்படவும், கேமரன் மலை மற்றும் பிற இடங்களில் பூக்கள் பயிரிடும் தொழில் செய்வோர் தங்கள் வணிகத்தைத் தொடரவும் நான் அனுமதி கோரினேன். அரசாங்கம் இதற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் டத்தோ சரவணன் குறிப்பிட்டார்.
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் பூக்கடைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான இந்திய பூக்கடை மற்றும் பூ விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். பூக்கடை கள் திறக்க வேண்டுமென ஒட்டுமொத்த இந்திய சமுதாயம் குரல் கொடுத்தது என்பது குறிப்பிடதக்கது.
