
மலேசியா கராத்தே அரங்கில் புகழ் பெற்றவர் மாஸ்டர் டாக்டர் டி. பொன்னையா அவர்.
இவரின் மூன்று பிள்ளைகளான மாஸ்டர் அறிவழகன், மாஸ்டர் தென்னவன், மாஸ்டர் தியாகு ஆகியோர் பல அனைத்துலகப் போட்டிகளில் தங்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்கள்.
கராத்தே மாஸ்டர் தியாகுவின் புதல்வர் ஜனார்த்தன் தற்போது நாட்டின் இளம் கராத்தே வீரராக வலம் வருகிறார்.
இவர் எஸ்பிஎம் தேர்வில் 8ஏ மற்றும் 1 பி எடுத்து சாதனை படைத்திருக்கிறார்..
தமது வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் தாத்தா பாட்டி, பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனார்த்தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
