
அண்மையில ரவாங்கில் உகாதி கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு வருகையாக துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.வெங்கட் பிரதாப் , பிபிபி கட்சியின் பொருளாளர் டத்தோஸ்ரீ டால்ஜிட் சிங் டாலில்வால், பிபிபி கட்சியின் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். தெலுங்கு சங்கத்தைச் சேர்ந்த சத்யா தமது நன்றியுரையாற்றினார்.

துணை அமைச்சருக்கும் மற்றும் இங்கு அனைவருக்கும் நன்றி என்றார். உகாதி கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அமைச்சரிடம் பல தீர்மானங்களை கொடுத்துள்ளோம். எங்களுக்கு மானியம் தேவை. அரசாங்கத்தில் பிரதமரிடம் சொல்லி மானியத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். தெலுங்கு சமூகம் பெரிய அளவில் உள்ளது இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் முழு ஆதரவை கொடுத்து வருகிறோம் என்றார்.
