
டத்தோஸ்ரீ ஹிஷாமுதடின் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பரவிவரும் தகவல் உண்மையல்ல என்று அக்கட்சி மறுத்துள்ளது. நேற்று இரவு அக்கட்சியின் உட்ச மன்ற கூட்டம் நடைபெற்றதாகவும் அக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஷாமுடின் நீக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்று பரவிவரும் தகவலையும் அம்னோ நிர்வாக செயலாளர் முகமட் சுமாலி ரெடுவான் மறுத்துள்ளார்.
ஹிஷாமுடின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த செய்தி போலி செய்தியாகும்.அம்னோ உச்ச மன்றக் கூட்டமே நடைபெறாத போது அவரை எப்படி கட்சியில் இருந்து நாங்கள் நீக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
