
சிலாங்கூர் கிளப்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வர்த்தக வல்லுநர்கள் பங்கேற்றனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டை வேல்ஸ் குழும நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் வடக்கூர் ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
மலேசியா பக்கம் ஏற்பாடுகளை கண்ணன் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டது. அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்தன.

மாநாட்டில் முக்கியமாக கலந்து கொண்டவர்கள்:
🔹 பள்ளிக்கூட இயக்குனர் தங்கர்பச்சான்
🔹 இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிவிப்பாளர் அப்துல் ஹமீட்
🔹 மற்றும் பல துறைகளில் உள்ள பிரபல வல்லுநர்கள்.

நிகழ்வில் உரையாற்றிய வடக்கூர் ராஜமாணிக்கம் கூறினார்:
“எங்கள் உலகளாவிய வணிக முயற்சி இது முதல் கட்டமாகும். இது உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குத் திறந்தது.
உற்பத்தி, கட்டுமானம், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் நாங்கள் செயல்படுகிறோம்.
மட்டும் லாபம் நோக்கி அல்ல, உலகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பங்களிக்கக்கூடிய ஒரு வணிக சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.“
மாநாடு, வணிகம் மற்றும் தொழில்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய பயனளிக்கக் கூடிய நிகழ்வாக அமைந்தது.
