
கெஅடிலான் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தலில் குணராஜ் உட்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர்.
கெஅடிலான் கட்சியின் தேர்தல்கள் பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடந்து முடிந்தது.
இதில் மத்திய செயலவை உறுப்பினரகளுக்கான தேர்தலில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் அதிக வாக்குகளை பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
அவரைத் தவிர்த்து செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், சிவமலர் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இவர்களை தவிர்த்து ஆடம் அட்லி, சான் மிங் காய், அஸ்லான் ஹெல்மி, மஸ்லி, கோ, நூரின் அய்னா, எலிசபெத் வோங், ஜூல்கிப்ளி, சித்தி அய்ஷா, அல்திமேத், அக்மால் நஷிர், ஹமிடி, லீ சியான் சுங், அசாம் கராப், சைட் இப்ராஹிம், சிம் சோன் சியாங் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
