
எஸ்பிஎம் தேர்வு முடிவில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப்
பாடங்களில் இந்திய மாணவர்கள் அடைந்துள்ள தேர்ச்சி மிகுந்த
மகிழ்ச்சியளிப்பதாக பினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர்
சமூக நல இயக்கத்தின் தலைவர் இரா.பெரியசாமி கூறினார்.
இவ்விரு
பாடங்களையும் தேர்வு செய்து சிறந்த அடைவு நிலையை பெற்றிருக்கும்
அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுக்கள் என்றார்.
கடந்த ஆண்டுகளைக்
காட்டிலும் 2020 -ஆம் ஆண்டு தேர்வு முடிவில் பினாங்கு மாநிலத்தில் அதன் தேர்ச்சி நிலை உயர்ந்திருப்பதும் பெருமைக்குரியது என இயக்கத்தின் சார்பில் அவர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
