27.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

5 லட்சம் தடுப்பூசிகளை வாங்க சிலாங்கூர் அரசு முயற்சி!

சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்கான் மைன்ஸ் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நாளை திங்கள்கிழமை முதல் தடுப்பூசி மையம் செயல்படும்.
தடுப்பூசி பெற முதல் நாளன்று 4,900 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக தடுப்பூசி நடவடிக்கை மன்றம் தெரிவித்துள்ளது.
8,000 பேர் வரை தடுப்பூசி பெறுவதற்கான வசதிகள் இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் சீராகவும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளுக்குட்பட்டும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை உயர்த்தப்படும். தடுப்பூசிக்கான முன்பதிவு செய்யும் முகப்பிடம் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles