
மஇகா சிகாமாட் தொகுதியின் ஆண்டு கூட்டம் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஇகா சிகாமாட் தொகுதி தலைவர் டத்தோ சிவகுமார் தலைமையில் இக்கூட்டத்தில் ஏராளமான மஇகா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய சிவகுமார் மஇகா தற்பொழுது வலுவாக உள்ளது. மலேசிய இந்திய சமூகத்திற்கு தேவையான அனைத்து நல்ல பல திட்டங்களை மஇகா நடைமுறைப்படுத்தி வருகிறது. டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ ஸ்ரீ சரவணன் தலைமையில் கட்சி மேலும் முன்னேற்றம் அடையும். இதன் மூலம் மலேசிய இந்தியர்கள் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த சந்திப்பு கூட்டத்தில் இந்த சந்திப்பு கூட்டத்தில் டத்தோ சைமன் ராஜா, ஏ.டி குமார் ராஜா போன்ற பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
