
குறுகிய கால வருகையாக பன் பட்டர் ஜாம் நாயகனும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது வெற்றியாளருமான ராஜு ஜெயமோகன் மலேசியா வருகை தந்துள்ளார். இப்படத்தை மலேசியாவில் வெளியீடு செய்துள்ள எம்.எஸ்.கே சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான எம் எஸ் கே கலை சாரதா தம்பதியர் அவரை வரவேற்று உபசரித்தனர். இப்படத்தைப் பற்றி ராஜ் ஜெயமோகன் கூறும்போது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளேன்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகிறேன். இந்த திரைப்படம் அனைவரும் ரசிக்கும் வண்ணமாக இத் திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படம் மலேசியாவில் 30க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரையிடப்பட உள்ளது. இத்திரைப்படத்தை எம் எஸ் கே சினிமாஸ் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இத்திரைப்படத்தை ராகவ் மிர்தத் இயக்கியுள்ளார். இந்த சந்திப்பு மாய் மாமாஸ் உணவகத்தில் நடைபெற்றது.
