
புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா, மலேசியா வருகை தந்துள்ளார். அவரின் இன்னிசை இசை நிகழ்ச்சி வரும் ஒன்பதாம் தேதி ஜொகூர் பாருவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு உற்சாகமாக அமைந்தது. இதில் கலைஞர்களும் ஊடகவியாளர்களும் பங்கேற்றனர். நாடறிந்த அறிவிப்பாளர் கவிமாறன் சிறப்புப் விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பில் உரையாற்றிய தேவா, “கவிமாறன் மிகச் சிறந்த கலைஞர். அவர் என்னைப் போலவே சிறந்த மெட்டுகளில் பாடல்களைப் பாடி வருகிறார். அவரது குரலும் எனது குரலும் ஒரே மாதிரியாக உள்ளன. அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்தார்.
