
செய்தி / படங்கள் : எம்.முருகன்
கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில், 24.11.2025 (திங்கட்கிழமை) ஆலய சிப்பந்திகள் உபயமாக 2ஆம் சோமவார விழா சிறப்பாக நடைபெறுகிறது.
மதியம் 2.00 மணிக்கு சங்காபிஷேகம் தொடங்கி, அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, பின்னர் சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.
பக்த மெய்யன்பர்கள் அனைவரும் இந்த உபய நிகழ்வில் கலந்து கொண்டு அருள்பெறுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
