
தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற விஜய், தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி, முதல் கையெழுத்தாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
தவெக ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றது. அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலில் பதவிப் பிரமாணமும், அதன்பிறகு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவியேற்றுக் கொண்ட அவர், ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் எனத் தெரிவித்தார்.



