27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஆண்களுக்கும் பாலியல் தொல்லை அதிகரிப்பு!” – நான்சி ஷுக்ரி கவலை

🔥 Views : 2,720
👁 Reading Now : 40

ஆண்களை உள்ளடக்கிய பாலியல் தொல்லை சம்பவங்கள் கடந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் பாலியல் தொல்லை எதிர்ப்புத் தீர்ப்பாயத்தின் (TAGS) தரவுகளின்படி, ஆண்களைச் சேர்ந்த பாலியல் தொல்லை வழக்குகள் 2024ஆம் ஆண்டில் 27 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் அது 45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு மே 17ஆம் தேதி வரை ஆண்களுக்கு எதிரான 24 பாலியல் குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“பாலியல் தொல்லை என்பது பெண்களை மட்டும் பாதிக்கும் பிரச்சனை அல்ல. அது ஆண்களையும் பாதிக்கிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன,” என்று நான்சி கூறினார்.

“பெண்கள் போலவே ஆண்களும் தொந்தரவு செய்யப்பட விரும்புவதில்லை. எனவே, அனைத்து பாலினங்களையும் நாம் மதிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற ‘Program Toleransi Sifar Keganasan: Say No To Sexual Harassment’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், மக்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வரையிலான TAGS தரவுகளின்படி, மொத்தம் 92 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் 69 வழக்குகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles