
செய்தி / படங்கள் : எம்.முருகன்
பிரபல “ஐ ராமா ” தங்கும் விடுதியின் நிர்வாகியான தண்ணீர்மலை செட்டியாரின் பிறந்தநாள் விழா அண்மையில் மிகச் சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக டத்தோ ரெனா ராமலிங்கமும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

விழாவில் பேசிய நிர்வாகத்தினர், “ஐ ராமா ” தங்கும் விடுதி விரைவில் கோலாலம்பூர் பகுதியில் நவீன வசதிகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
புதிய தங்கும் விடுதியில் உயர்தர வசதிகள், குடும்பங்களுக்கு ஏற்ற தங்கும் அறைகள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயணிகளுக்கான சிறப்பு சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த புதிய முயற்சி கோலாலம்பூர் பகுதியில் மேலும் ஒரு தரமான தங்கும் வசதியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



