
நாளை வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை சாலை போக்குவரத்து குற்றங்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக மலேசிய போலீஸ் துறை அறிவித்துள்ளது
Pdrm அதிகாரபூர்வ அகப்பக்கம் அல்லது Mybayar saman செயலி மூலமாக மக்கள் அபராதத்தை செலுத்தலாம் என்று புக்கிட் அமான் போக்குவரத்து குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ அஜிஸ்மான் தெரிவித்தார்.
இதனிடையே நீதிமன்ற வழக்கில் உள்ள அபராதங்கள், இந்த ஆண்டில் புரிந்த சாலை குற்றப்பதிவுகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அபராதங்களுக்கு கழிவு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
