
பேரா மாநில மந்திரி புசார் டத்தோ ஷாராணி முகமட்டின் நடவடிக்கையை சிறுமைப்படுத்தும் தரப்பினர் அவ்வாறான செயலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு கூறினார்.
மாநிலப் மக்கள் பிரச்சனைகளையும்,கோவிட் -19 விவகாரங்களையும் சிறப்பாக கையாண்டு வரும் அவருக்கு எதிராக சில பொறுப்பற்ற ஊடகவியலாளர்களும்,பொது மக்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.
அரசியல் மற்றும் கட்சி போராட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும்,நாம் அனைவரும் இறைவன் படைப்பில் மனிதர்களே என கூறிய அவர்,இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைவரும் பார்த்துக் கொள்ள வேண்டுமென பேரா மாநில முன்னாள் மந்திரி புசாருமான அவர் தெரிவித்தார்



