25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

தவறு நடந்திருந்தால் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுங்கள்!

தமிழகத்தின் முக்கிய சேனல் ஒன்றில் ஒளிபரப்பான ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சியில், மலேசியாவில் வேலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் மலேசியாவிற்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா வில் உள்ள இந்திய வாழை இலை உணவகத்தில் தானும், தன்னுடைய சக ஊழியரும் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் மைக்கல் என்ற நபர் ஓரினப் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதோடு, அவருடைய உடலில் பெட்ரோல் உற்றித் தீ வைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உண்மை நிலையை ஆராய போலீஸ் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு செயலாளர் அண்ட்ரூ டேவிட் செராஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தவறு நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை
அண்ட்ரூ தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles