
கடுமையான நீரிழிவு நோயினால் வலது காலை இழந்த காளியம்மாவிற்கு பேரா மாநில பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரியுமான தினகரன் இன்று உதவிக்கரம் நீட்டினார்.
கடுமையான நீரிழிவு நோயின் தாக்கத்தால் அவதியுற்று வந்த காளியம்மாள்,
ஒரு அறுவை சிகிச்சை மூலம் தனது வலது காலை இழந்தார்.
தகவலறிந்த தினகரன் அவருக்கு ஒரு கணிசமான தொகையை வழங்கி அவருக்கு மாதமாதம் கிடைக்கக்கூடிய சமூகநல இலாக்காவின் உதவியையும் உறுதிபடுத்தினார்..
பேரா மாநிலத்தில் ஒரு துடிப்புமிக்க சேவையாளராக இவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
