
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 4,202 பேர் நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று 7,530 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 441 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது என்று அமைச்சு அறிவித்துள்ளது.
