
சிலாங்கூர் மாநிலத்தின் 3,000 குடும்பங்களுக்கு உதவ ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வெள்ளியை சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் ஒதுக்கியுள்ளது. நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ள 3,000 குடும்பங்களுக்கு உதவ இந்த நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி மன்ற உறுப்பினரிடம் ஐம்பது பட்டுசீட்டுகள் வழங்கப்படும்.
தங்கள் வட்டாரத்திலுள்ள ஏழை மக்களுக்கு இந்த பட்டுச் சீட்டுக்களை அவர்கள் வழங்குவார்கள்.
இந்த பட்டு சீட்டுகளை கொண்டு அவர்கள் மளிகைப் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
