
இவ்வாண்டு ஜூன் 4ஆம் தேதி வரை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுங்கு (எஸ்.எம்.இ.) , RM12.12 பில்லியன் இலகு கடனுதவிகளை உள்ளூர் வங்கிகள் அங்கீகரித்துள்ளன என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
தேசிய வங்கியால் (பிஎன்எம்) இயக்கப்படும் இலகு கடன் உதவி, 25,680 நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
இந்தத் தொகையில், சிறப்பு உதவி (எஸ்.ஆர்.எஃப்) நிதிகள், ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் வசதிகள் (ஏ.டி.எஃப்), அனைத்து பொருளாதாரத் துறை வசதிகள் (ஏ.இ.எஸ்) மற்றும் வேளாண் உணவு வசதிகள் (ஏ.எஃப்) ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்
