
நாடாளுமன்றத்தை கூட்டும்படி வலியுறுத்தி கொண்டிருப்பது அரசியல் மிருகங்களுக்கு சமம் என்று பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் முகமட் பைஸ் கடுமையாக சாடியுள்ளார்.
மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆலோசனைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தை கூட்டுகள்.தவறினால் பதவி விலகும்படி பிரதமரை பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் வலியுறுத்தி கொண்டிருப்பது அரசியல் மிருகங்களுக்கு சமம் என அவர் சாடினார்.
நாட்டில் நோய்த்தொற்று மோசமாக இருக்கும் நேரத்தில் பொறுப்பில்லாமல் நாடாளுமன்றத்தை கூட்டும்படி இவர்கள் வலியுறுத்தி வருவது தேவை இல்லாத ஒன்று என்றார் அவர்.
