
இவ்வாண்டு SPM and STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரட்சி ஜீடின் தெரிவித்தார். மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் முன்னுரிமை வழங்குவதற்கு கோவிட் தடுப்பூசி பணிக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைபர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அதே முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
