
நாட்டின் பொருளாதாரம் மோசமான கட்டத்தில் இருக்கிறது. மக்கள் இன்னமும் சாப்பாட்டுக்காக கஷ்டப்படும் நிலையில் பொருளாதாரம் சீரடைந்து வருவதாக கூறப்படுவது தொடர்பில் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பினார்
மக்கள் வேலையை இழந்து தவிக்கிறார்கள்.
நாட்டின் தொழில் துறைகளும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
மக்கள் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது தொடர்பில் ஆட்சியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்
மக்கள் வேலையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு பொருளுதவிகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதாக அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறியிருப்பதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வன்மையாக சாடினார்.
