
இன்று பெய்த கடுமையான காற்று மழையால் காப்பார் மேருவில் பல மரங்கள் வேரோடு சாய்ந்த வேளையில் வீடுகளும் மோசமாக சேதமடைந்தன.
இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன.
இதனால் பல வாகனங்கள் சேதமுற்றன.

வீடுகளில் மரங்கள் விழுந்ததால் பல குடும்பங்கள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.
மேரு சட்டமன்ற உறுப்பினர் பக்குருல்ஹாசி உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவிகளை வழங்கினார்.
பண்டார் கிள்ளான் உத்தாமா கிராமத் தலைவரும் மேரு சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான அருள்நேசன் உட்பட பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங.
சாலை மற்றும் வீடுகளில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
