
நாடாளுமன்றத்தை கூட்டும் படி மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் மலாய் ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால் எந்த தேதியில் நாடாளுமன்றத்தை கூட்டுவது என்று மாமன்னர் அறிவிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் பேசியிருப்பது மாமன்னரை உதாசீனப்படுத்தும் செயல் என்று சிலாங்கூர் உலுலங்காட் கெஅடிலான் சாட்டியுள்ளது.
அமைச்சரின் செயல் அரசியலமைப்பு சட்டத்தை மீறியது என்பதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உலுலங்காட் கெஅடிலான் இளைஞர் பிரிவு பிரிவு துணைத் தலைவர் விஷ்ணு தலைமையில் இன்று செமினி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
