
இணையம் வழி கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு தரமான கைத்தொலைபேசிகளை வழங்கும்படி அரசாங்கத்தை நாடாளுமன்ற மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாட்டிங் கேட்டுக் கொண்டார்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கைத்தொலைபேசிகள் வெடித்த சம்பவத்தை கடுமையாக கருதவேண்டும்.
தரமற்ற கைத்தொலைபேசிகளை வழங்கினார் இதுதான் நடக்கும். ஆனால் அரசியல்வாதிகள் இதை எளிதாக எடுத்துக் கொண்டு வியாக்கியானம் செய்கிறார்கள்.
மாணவர்களுக்குத் தரமான தொலைபேசிகளைக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நடப்பது முதல் தடவையல்ல, இது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் இயங்கலை வகுப்புகளில் இணைய முடியாமல் போகிறது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மாணவர்களின் தேவைகளுக்குச் சிறந்த, தரமான சாதனங்களைப் பேராக் மாநில அரசு வழங்கவில்லை என்று அவர் சாடினார்.
