
விரைவில் நாடாளுமன்றம் கூட வேண்டுமென்ற மாமன்னரின் அறிவிப்பை அவமதிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட பிரதமர்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடன் ஹசானுக்கு எதிராக பினாங்கு மாநிலத்தில் 9 பிகேஆர் தொகுதிகள் போலீசில் புகார் செய்துள்ளன.
இவரின் கருத்துக்கள்
மாமன்னரின் அறிவிப்புக்கு எதிராக உள்ளதால் போலீசார் உடனடி
நடவடிக்கை எடுக்க வேண்டுமென கட்சியின் பினாங்கு மாநில தொலைத் தொடர்பு இயக்குனர் அமீர் கஸாலி தெரிவித்தார்.
பத்து காவான்,நிபோங்
திபால்,பெர்மாத்தாங் பாவ்,புக்கிட் மெர்தாஜாம்,கப்பளா பத்தாஸ்,பாகான்,பாலிக் புலாவ்,பாயான் பாரு மற்றும் தஞ்சோங் ஆகிய
தொகுதிகளின் பொறுப்பாளர்கள் இப்புகாரைச் செய்தனர.
இன்னும் 4 தொகுதிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை போலீஸ் புகார் செய்யவுள்ளன.
