
கிள்ளான் உத்தாமா ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நல்லுள்ளம் படைத்த பொதுமக்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். இந்த இல்லத்தில் 45 பிள்ளைகளும் 10 பராமரிப்பாளர்களும் தங்கியுள்ளனர்.
சமுதாய சேவையாளர் டாக்டர் ராஜன் மணியம் கடந்த வாரத்தில் 1,,500 வெள்ளி செலவில் உணவுப் பொருட்களை வாங்கி வாங்கிக் கொடுத்தார். இந்நிலையில் ரெனோக்ஸ குடும்பத்தினர் இன்று அந்த இல்லத்திற்கு விரைந்து சிறுவர்களுக்கு சுவையான கே எஃப் சி உணவுகளையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தனர்.
