
சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் நோயினால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.
கடந்தாண்டில் முதல் ஐந்து மாதங்களில் 46,713 பேர் டிங்கி நோயினால் பாதிக்கப்பட்டார்கள். இவ்வாண்டின் இதே காலக்கட்டத்தில் 11,629 மட்டுமே டிங்கி நோய்க்கு ஆனார்கள்.
டிங்கி காய்ச்சல் காரணமாக ஏற்பட்ட மரணச் சம்பவங்களின் எண்ணிக்கையும் 92.7 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்தாண்டில் 82 பேர் பலியானார்கள். இவ்வாண்டு 6 மரணச் சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
