
நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதுகுறித்து முடிவெடுக்க செயற்குழு அமைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கூறியிருக்கிறார்.
இதுபற்றி கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இது தொடர்பில் ஆராயத் தேவையில்லை என்றார்.
நாடாளுமன்றத்தை கூட்டும்படி சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும்.
மாமன்னர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்றம் விரைந்து கூட்டப்பட வேண்டும் என முடிவு காணப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
