
காதலி ஷாமினியின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கிய ஹென்ரி கேசவன் என்ற இளைஞருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதலிக்கு காயம் ஏற்படுத்தியதாக தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். ஜூன் 15ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணிக்கு ரவாங் புத்ராவில் இவர் இந்த குற்றத்தை செய்ததாக கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஜூன் 16ஆம் தேதியிலிருந்து இவர் மூன்று மாதத்திற்கு இந்த தண்டனையை அறிவிக்கும்படி மாஜிஸ்திரேட் நிக் பாட்லி உத்தரவு பிறப்பித்தார்
