
அனைத்து வகை தடுப்பூசிகளையும், உலக நாடுகள் அங்கீகரிக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தேசியக் கோவிட் நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தொற்றுநோயைக் கையாள்வதில், உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும் அவசரகாலப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதால், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை ஒவ்வொரு நாடும் ஒரு குறிப்பாக ஏற்று பயன்படுத்த வேண்டும்.
அனைத்து தடுப்பூசிகளையும் முழு உலகமும் அங்கீகரித்தால், பயன்படுத்தப்படும் தடுப்பூசி வகைக்கு எதிரான பாகுபாடு பிரச்சினைகள் எழாது என்று அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது, அதே நேரத்தில் சீனாவில் தயாரிக்கப்படும் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசி களை மட்டுமே அந்நாடு
