
வீடின்றி கெடா லூனாஸிலுள்ள பழைய சந்தையில் தங்கி வரும்
இந்தியரான 44 வயது முனியப்பன் த/பெ பழனியப்பன் என்பவருக்கு பாடாங்
செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மு.கருப்பையா உதவி புரிந்தார்.
இவர் இங்கு தங்கியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்வதாக ,வணிகர்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து,நேரில் சென்று அவரை சந்தித்து அணிந்துக் கொள்ள உடைகளையும் சிறிது பண உதவியும்
வழங்கினார்.
சமூகநல இலாகாவின் மூலம் மாதம் 300 வெள்ளி உதவித்
தொகை கிடைத்து வருகிறது.இந்நிலையில் அவரின் அடையாள அட்டை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான அட்டையும் தொலைந்து போய் விட்டதால் எம்சிஓ காலம் முடிந்தப் பிறகு அந்த இரு பிரச்சனைகளுக்கும்
நடவடிக்கை எடுக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.கருப்பையா
கூறினார்.
