
மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் spo விதிமுறைகளை மீறி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதற்காக 5 இந்திய இளைஞர்களுக்கு இன்று தலா 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
பினாங்கு பட்டர் வெர்த்தில் கடந்த வாரம் நடைபெற்ற இறுதிச்சடங்கில் sop விதிமுறைகளை மீறியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர்களுக்கு தலா 6,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே சில இளைஞர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரி உள்ளனர்.
