
நோய்த்தொற்று தாக்கத்தினால் நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது இதனால் வர்த்தக மையங்கள் மற்றும் கடைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன வியாபாரத்துக்கு பெயர்போன கிள்ளான் லிட்டில் இந்தியாவும் தனது பொழிவை இழந்துள்ளது.
அனைத்துக் கடைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற அனுமதி இல்லாததால் பொதுமக்களும் புத்தாடைகளை வாங்க வருவதில்லை. இதனால் கிள்ளான் லிட்டில் இந்தியா வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
