
பத்து உபான் சட்டமன்ற தொகுதியிலுள்ள 11 பள்ளிகளிலிருந்து பி40 குடும்பங்களைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இ – கற்றல் கணினி திட்டத்தின் கீழ் பினாங்கு மாநில அரசாங்கமும்,ஒரு தனியார் நிறுவனமும் இந்த கணினிகளை அன்பளிப்பு செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கூறினார்.
வசதிக் குறைந்த மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்துக் கொடுப்பதில் தாம் பெருமைக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.



