26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மேலும் ஒரு காவல் கைதி மரணம்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

🔥 Views : 8
👁 Reading Now : 39

முகமட் இக்பால் அப்துல்லா என்ற காவல் கைதி இன்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
கொலை குற்றச்சாட்டு மற்றும் 2 சிறிய குற்றங்களுக்காக கடந்த 28- 9 -2020 ஆம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட இவர் சிகிச்சைக்காக தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
29 வயதான முகமட் இக்பால் அப்துல்லா இன்று காலையில் மரணமுற்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிப்பதாக வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் தெரிவித்தார்.
திருமணமான இவருக்கு நூர் ஸம்சியா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
நாட்டில் கடந்த 2 மாதங்களில் ஐந்து காவல் கைதிகள் மரணம் அடைந்துள்ளார்.
கணபதி, சிவபாலன், சுரேந்திரன் மற்றும் ஹேமநாதன் ஆகிய காவல் கைதிகள் மரணமடைந்துள்ளனர்.
இப்போது இந்த வரிசையில் முகமட் இக்பால் அப்துல்லாவும் இடம்பெற்றுள்ளார்.
காவல் கைதிகள் மரணமடையும் சம்பவம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது என்று வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles