
நாட்டிலுள்ள இபிஎப் முகப்பிடங்கள் நாளை முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8:30 தொடங்கி மதியம் 2 மணி வரை மட்டுமே குறிப்பிட்ட சேவைகளுக்கு இபிஎப் திறக்கப்பட்டிருக்கும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.
50 முதல் 60 வயது உடையவர்கள் தங்களது ஊழியர் சேமநிதியை மீட்பது, சுகாதார பாதிப்பு அல்லது இறப்பு காரணமாக பணத்தை மீட்பது போன்ற சேவைகளை முகப்பிடங்களில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
