
குத்தகை முறையில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைத்து மருத்துவர்களையும் நிரந்தரமாக பணியில் அமர்ந்துங்கள் என்று எம்டியூசி முன்னாள் தலைமைச் செயலாளர் என். கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் குத்தகை அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் இவர்கள் பல சலுகைகளை இழக்கிறார்கள்.
நாடு இப்போது நோய்த் தாக்கத்தில் இருக்கிறது. நோயாளிகளுக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
ஆகவே குத்தகை அடிப்படையில் பணியாற்றும் மருத்துவர்களை நிரந்தர மருத்துவர்களாக நியமனம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் குத்தகை அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட எல்லா மருத்துவர்களையும் மற்ற மருத்துவ பணியாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தொழிலாளர் சட்டப்பிரிவு மறுமலர்ச்சி குழு தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
